சிறுமி பலாத்காரம் செய்து கொலை கேமராவில் குற்றவாளி படம் சிக்கியது

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள ஹொசக்கோட்டையில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து. போலீஸாரின் விசாரணையின் போது குற்றவாளியின் படம் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

பெங்களூரு ஊரக மாவட்டம் ஹொசக்கோட்டை அருகே உள்ளது சுலிபெலே கிராமம். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு, படுகொலை செய்யப்பட்டிருந்த 8 வயது சிறுமியின் உடல் கிடைத்தது. இவர் அதே பகுதியில் கட்டிட வேலை செய்துவரும் கூலி தொழிலாளியின் மகள் என தெரியவந்துள்ளது. சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீஸார் மருத்துவ பரிசோதனைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி யுள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பெங்களூரு ஊரக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பி.ரமேஷ் கூறிய தாவது:

ஆள்நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.சிறுமியின் கதறல் வெளியே கேட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது வாய் அடைக்கப்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கி றோம். விசாரணையின்போது, சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே இருந்த கடைகளின் கண்காணிப்பு (சிசிடிவி) கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அலசினோம்.

அதில் பிற்பகல் 3 மணியளவில் சிறுமியுடன் நடுத்தர வயதுள்ள ஒருவர் விளையாடுகிறார். அவர் சிறுமியை அழைத்துச் செல்வது தெரியவந்துள்ளது. சந்தேகிக்கப்படும் நபரின் படம் கேமராவில் பதிவாகியிருப்பதால், அவரை ஒரிரு நாட்களில் பிடித்துவிடுவோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்