துணைத் தூதரகங்களை தாக்க பாகிஸ்தானியர் சதி: மத்திய அரசிடம் ஆதாரங்களை வழங்கியது அமெரிக்கா

By பிடிஐ

இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் துணைத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தொடர்பான வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை மத்திய அரசுக்கு அமெரிக்க அரசு வழங்கி உள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மற்றும் பெங்க ளூருவில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரகம் ஆகிய வற்றின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் வேவு பார்த்த ஜாகிர் உசைன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக் கொண்ட உசைன், இதுதொடர்பாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா ஆலோசகராக பணிபுரியும் அமிர் ஜுபைர் சித்திக்கை சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாஜி என்பவரையும் சித்திக் தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் உசைன் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு அமெரிக்காவுக்கு என்ஐஏ கோரிக்கை வைத்திருந்தது.

இதன் அடிப்படையில், உசைன் மற்றும் ஷாஜி ஆகியோருக் கிடையே நடைபெற்ற இ-மெயில் பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

35 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்