கோவா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
இதுவே, பன்றிக் காய்ச்சல் நோய்க்கு அம்மாநிலத்தில் நேர்ந்த முதல் பலி என மாநில சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "ஹாங்காங்கில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவா வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டன.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோவா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு இதுவே முதல் பலி.
பலியான நபருடன் வந்த 4 பேருக்கும் நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
தமிழகம்
20 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago