நிதிஷ் கட்டாரா கொலை வழக்கு: 3 பேரும் குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

கடந்த 2002-ம் ஆண்டு டெல்லியில் நிதிஷ் கட்டாரா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்களது ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனான நிதிஷ் கட்டாரவை, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி டி.பி. யாதவின் மகன் விகாஸ் யாதவ் உள்பட 3 பேர் கடந்த 2002ம் ஆண்டு கடத்திக் கொலை செய்தனர்.

இந்த வழக்கில், விகாஸ் யாதவ் உள்பட மூவரும் குற்றவாளிகள் என விசாரணை நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என இன்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் மூவரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இதற்கிடையே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிதிஷ் கட்டாராவின் தாயார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்