தெலங்கானாவில் 10 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீடுகள்

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநில வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் இந்திர கிரண் ரெட்டி தலைமையில் குடியிருப்பு வாரிய அதிகாரிகளுடன் ஹைதராபாத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உத்தரவின் பேரில், ஏழைகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய 2 படுக்கை அறைகள், சமையல் அறை, நவீன கழிவறை போன்ற வசதிகளுடன் ரூ.4.6 லட்சம் செலவில் இலவசமாக வீடு கட்டி தரும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன்மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் வீடுகள் வீதம் வரும் 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் இலவசமாக கட்டி தரப்படும். இவ்வாறு அமைச்சர் இந்திர கிரண் ரெட்டிதெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்