ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் திமுகவை மூன்றாம் தரப்பாக சேர்த்துக்கொள்ள கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனு மீதான விசாரணை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் சரவணன், பாலாஜி சிங், நடேசன் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிற்பகல் புதிய மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2005-ம் ஆண்டு உச்சநீதி மன்றம் எங்கள் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றியது. மேலும் சிறப்பு நீதிமன்ற விசாரணையின்போது அரசுத் தரப்பிலும், குற்றவாளிகள் தரப்பிலும் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டபோது நாங்கள் தலையிட்டு திருத்தியுள்ளோம்.
இறுதி வாதத்தின்போது அரசு வழக்கறிஞர் பவானிசிங் செய்த பல பிழைகளை நீதிமன்றத்தில் திமுக சுட்டிக்காட்டியதை நீதிபதி டி'குன்ஹா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு உதவியாக இருக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனவே இவ்வழக்கின் மேல்முறையீட் டிலும் திமுகவை மூன்றாம் தரப் பாக சேர்க்கள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago