பதிலடி கொடுத்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை: ராஜ்நாத் சிங்

By செய்திப்பிரிவு

அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத இயக்கங்கள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களிடம் தனது கருத்தை பதிவு செய்துள்ள ராஜ்நாத் சிங், "பல முறை தகுந்த பதிலடி கொடுத்தும், பாகிஸ்தான் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. ஆனாலும், பாகிஸ்தான் அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது" என்றார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா குடியரசுத் தின விழாவை ஒட்டி இந்தியா வருகிறார். 25-ம் தேதி இங்கு வரும் அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் வருகையயொட்டி நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடன் ஒபாமா வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் தீவிரவாதிகள் சதித் திட்டத்தை முறியடிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

28 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

55 mins ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

48 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்