‘தேச பக்தர் நாதுராம் கோட்சே’ என்ற திரைப்படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அகில பாரத இந்து மகாசபை பொதுச்செயலர் முன்னா குமார் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள ஜுடீசியல் மாஜிஸ்திரேட் அனிருத் பதக் நேற்று அனுப்பி உள்ள இந்த சம்மனில், ஜனவரி 20-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மனுதாரர் ஹேமந்த் பாட்டீல் தரப்பு வழக்கறிஞர் வாஜித் கான் தெரிவித்தார்.
காந்தியை சுட்டுக்கொன்ற அதே தினத்தில் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாகவும், இது வெளியானால் மத ரீதியில் மக்களை தூண்டிவிடும் அபாயம் இருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
5 hours ago