உ.பி.யில் 65 வயது மூதாட்டி பலாத்காரம்

By செய்திப்பிரிவு

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபூர் மாவட்டத்தில் 65 வயத்ய் மூதாட்டி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அதீத ரத்தப்போக்கால் அந்த மூதாட்டி பரிதாபமாக பலியானார்.

காசியாபூர் சத்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து உதவிக்குரல் கேட்டதையடுத்து வழிப்போக்கர்கள் சிலர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அரை நிர்வாண கோலத்தில் ஒரு மூதாட்டி இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மூதாட்டி இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 4 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

இந்தியா

21 mins ago

சினிமா

16 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்