66-வது குடியரசு தின விழாவையொட்டி இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
கடந்த ஜனவரி 6-ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருநாட்டு வீரர்களும் இன்று இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
உரி பகுதியில், ஸ்ரீநகர் - முசாபார்பாத் சாலையில் இருநாட்டு ராணுவத்தினரும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், தாங்தார் பிரிவு, பூஞ்ச் பிரிவு ஆகிய பகுதிகளில் இருநாட்டு வீரர்களுக்கு இனிப்புகள் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
எல்லையில் அத்துமீறல், தீவிரவாத ஊடுருவலையும் தாண்டி இத்தகைய இனிப்பு வழங்கும் நிகழ்வு குடியரசு நாளில் நடைபெறும் வழக்கமான நிகழ்வு என ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
16 mins ago
க்ரைம்
22 mins ago
க்ரைம்
31 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago