உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற பிரணாப் முகர்ஜி நேற்று வீடு திரும்பினார்.
இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. அடைப்பை நீக்க ரத்தக் குழாயில் ‘ஸ்டென்ட்’ என்ற சிறிய டியூப் பொருத்தப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் நிலை முழுமையாக சீராகி விட்டதை அடுத்து அவர் வீடு திரும்பினார். பிரணாப் முகர்ஜிக்கு இப்போது 79 வயதாகிறது.
முன்னதாக வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 13-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப் பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற் கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
9 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago