ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: இன்றும் வாதம் தொடரும்

By இரா.வினோத்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சனிக்கிழமையும் (இன்று) அரசு தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து தனது இறுதி வாதத்தை முன் வைக்க வேண்டும் என நீதிபதி டி'குன்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு உடல்நிலை சரியில்லாததால், அவரது முன்னிலையில் அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி 6-வது நாளாக தனது இறுதிவாதத்தை தொடர்ந்தார்.

இசையமைப்பாளர் கங்கை அமரன் உட்பட பலரை மிரட்டி சசிகலா மிக குறைந்த விலைக்கு சுமார் 100 ஏக்கர் நிலம் வாங்கினார். ஜெயலலிதா,சசிகலா,சுதாகரன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த நிறுவனங்களுக்காக 1000 ஏக்கர் நிலத்தையும் மிக குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர் என முருகேஷ் எஸ்.மரடி தெரிவித்தார்.

சென்னையை சேர்ந்த பத்திரப் பதிவு அதிகாரி ராஜ கோபாலன் அளித்த 46 பக்க வாக்கு மூலத்தையும் அவர் வாசித்தார்.

அதேபோல, மன்னார்குடி கிராம அலுவலரான ஜெய ராமன், மன்னார்குடி அருகேயுள்ள விளார் கிராம அலுவலரான முகமது யூசுப் ஆகிய இருவரும் 1991-96 காலக்கட்டத்தில் சசிகலாவும், சசிகலாவின் கணவர் நடராஜனும் வாங்கிய சொத்துக்களை பற்றிய வாக்குமூலம் அளித்திருந்தனர். அதில் எந்தெந்த நிலங்கள் சசி கலாவின் பூர்வீக நிலம்,எவை புதியதாக வாங்கப்பட்டவை என்பது குறித்து முருகேஷ் எஸ்.மரடி வாசித்தார். அதனை தொடர்ந்து பேசிய அரசு உதவி வழக்கறிஞர், ‘‘1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெய லலிதாவின் வருமான வரி, சொத்துக்கணக்கு தணிக்கை யாளராக இருந்த கோபால் ரத்தினம், ஜெயலலிதாவின் வருமானம் மற்றும் சொத்துகள் குறித்து வாக்குமூலம் அளித்துள் ளார்.

‘‘1991-96 காலக்கட்டத்தில், ஜெயலலிதா பல கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கி குவித்தார்''என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

மூவர் ஆஜராக விலக்கு

இதனைத்தொடர்ந்து, ‘சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் சனிக்கிழமை சிறப்பு நீதி மன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை மறுபரீசிலனை செய்ய வேண்டும், என சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் வேண்டுகோள் விடுத் தார்.

இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, ‘‘ 3 பேரும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக நீதிமன்றத் தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

16 mins ago

கல்வி

9 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

12 mins ago

ஓடிடி களம்

19 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்