தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதி அவசியம்: ராஜஸ்தான் மாநிலத்தில் அமல்

By பிடிஐ

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி அவசியம் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான அவசர சட்டத் துக்கு அந்த மாநில ஆளுநர் கல்யாண் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட குறைந்த பட்ச கல்வித் தகுதியை நிர்ண யித்து நேற்றுமுன்தினம் இரவு ராஜஸ்தான் அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இதற்கு அந்த மாநில ஆளுநர் கல்யாண் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி ‘ஜில்லா பரிஷத்’ தேர்தலில் போட்டியிட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட பொது பிரிவினர் 8-ம் வகுப்பும் தாழ்த்தப்பட்டோர் 5-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வீட்டில் கழிவறை இல்லாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்