இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரியங்கா வாழ்த்து

By ஐஏஎன்எஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்திய  அணி வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு சென்றதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

லீட்ஸில் நேற்று (சனிக்கிழமை) நடந்த லீக் போட்டியில் கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அற்புதமான சதங்களை அடித்தனர். இந்தியா இலங்கையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இலங்கை அணியை வென்றதன்மூலம் இந்தியா உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் செவ்வாயன்று மான்செஸ்டரில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் மென் இன் ப்ளூ இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை பிரியங்கா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரியங்காவின் ட்விட்டர் பதிவு வருறுமாறு:

"இலங்கைக்கு எதிரான அற்புதமான வெற்றிக்கு டீம் இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். உலகக் கோப்பையில் மிகவும் அற்புதமான செயல்திறன் கொண்ட அணியாக இந்திய அணி உருவெடுத்துள்ளது. இந்தியா முழுவதும் உங்களுடன் உள்ளது. டீம் இந்தியா அரையிறுதிக்கு வாழ்த்துக்கள்.''

இவ்வாறு பிரியங்கா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்