வருடாந்திர அமர்நாத் யாத்திரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் முறைப் படி நாளை தொடங்கவுள்ள நிலை யில், முதல் பக்தர்கள் குழு ஜம்மு வில் இருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று புறப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடு களும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
தெற்கு காஷ்மீரில் உள்ள இமய மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அனந்த் நாக் மாவட்டத்தில் 36 கி.மீ. தொலைவு கொண்ட பாரம்பரிய பஹல்காம் வழியிலும் கந்தர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. பால்தால் வழியிலும் இதற்கான யாத்திரை நடைபெறுகிறது.
இந்நிலையில் நிகழாண்டுக்கான புனித யாத்திரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் முறைப்படி நாளை (ஜூலை 1) தொடங்குகிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி, ரக் ஷா பந்தன் பண் டிகை வரை 46 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது.
யாத்திரைக்கு நாடு முழுவதி லும் இருந்து இதுவரை 1.5 லட்சத் துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து உள்ளனர்.
யாத்திரைக்காக சாதுக்கள் உள்ளிட்ட பக்தர்கள் நூற்றுக்கணக் கானோர் ஜம்முவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் முதல் பக்தர்கள் குழு ஜம்முவில் உள்ள பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து இன்று புறப்படுகிறது.
இங்கிருந்து பஹல்காம் மற்றும் பால்தால் அடிவார முகாம்களுக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள், அங்கு இரவு தங்கிய பிறகு நாளை அதிகாலையில் நடைப்பயணமாக அமர்நாத் குகைக் கோயிலுக்கு யாத்திரையை தொடங்குவார்கள்.
இதுகுறித்து ஜம்மு போலீஸ் ஐ.ஜி. எம்.கே. சின்ஹா கூறும்போது, “பஞ்சாப் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீரின் நுழைவாயிலான லக்கன்பூரில் இருந்து யாத்திரை வழி நெடுகிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடிவார முகாம்கள், பக்தர்கள் தங் கும் இடங்கள், சமுதாய சமையற் கூடங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. யாத்தி ரையை சீர்குலைக்க தீவிரவாதி கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல் எதுவும் இல்லை” என்றார்.
இதனிடையே ஜம்மு முதுநகர் பகுதியில் உள்ள ராமர் கோயில் ஒன்றில் அமர்நாத் பக்தர்களுக்கான பதிவு கவுன்ட்டரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அங்கிருந்த சாதுக்கள் மத்தியில் பேசும்போது, “கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு முதல் அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு தேவை யிருக்காது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு இதுவே இறுதிக்கட்டமாக இருக்கும் என எனது மனசாட்சி கூறுகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
5 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago