குஜராத் மாநிலத்தில் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் என்.கே.அமீன், தருண் பரோட் ஆகிய இருவரும் நேற்று பதவி விலகினர்.
போலி என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய இந்த அதிகாரிகளைப் பணி ஓய்வுக்கு பிறகு ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு குஜராத் அரசு மறு நியமனம் செய்தது. இதையடுத்து தபி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அமீனும், வடோதராவில் மேற்கு ரயில்வே டிஎஸ்பி.யாக தருண் பரோட்டும் பணியாற்றி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராகுல் சர்மா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
‘இந்த விவகாரத்தில் குஜராத் அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிடில் நாங்கள் எடுக்க நேரிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டிப்புடன் கூறியது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் அதிகாரிகள் இருவரும் பதவி விலக முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
சொராபுதீன், இஸ்ரத் ஜகான் போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் அமீன் விசாரணையை எதிர்கொண்டார். இஸ்ரத் ஜகான், சாதிக் ஜமால் போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் தருண் பரோட் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
44 mins ago
ஜோதிடம்
59 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago