உத்தரபிரதேசத்தில் சட்டமேலவைக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுகின்றனர்.
உ.பி.யில் முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, அமைச்சர்கள் சுதந்திர தேவ் சிங், மொசின் ராசா ஆகியோர் இரு அவைகளிலும் (சட்டப்பேரவை, சட்டமேலவை) உறுப்பினர்களாக இல்லை. இவர்கள் செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஏதேனும் ஓர் அவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் மேலவையில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் இவர்கள் போட்டியிடுகின்றனர். சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்சிகள் பதவி விலகியதால் இந்தக் காலியிடம் ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago