உச்ச நீதிமன்றத்தில் திருப்பம் :காவிரியின் குறுக்கேஅணை கட்ட தமிழகம் எதிர்ப்பு

By இரா.வினோத்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு இல்லை’ என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘‘காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதிக்க முடியாது. அவ்வாறு புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது கடுமையாக பாதிக்கப்படும். எனவே காவிரி யின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்டக் கூடாது’’ என வாதிட்டார்.

வழக்கு விசாரணையின்போது தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்