காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் 3 ஆண்டுகளில் குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கான (என்ஐஏ) கட்டிடம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திறந்து வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தேசிய புலனாய்வு நிறுவனத்தின் நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளன. இந்தியாவின் பாதுகாப்புக்காக உறுதிஏற்றுள்ள நாங்கள் அதற்காக கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறோம். சவாலை ஏற்றுக் கொண்டோம். கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் பயங்கரவாதம், நக்சலைட் தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன.
தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்து வெற்றி பெறுவோம். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 ஆண்டுகளில் தீவிரவாதம் 75 சதவீதமாகவும் நக்சலைட் தீவிரவாதம் 35 முதல் 40 சதவீதமாகவும் குறைந்துள்ளன. கள்ள நோட்டு மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கான நிதி வரும் வழியை அடைத்து விட்டால் அது தீவிரவாதத்துக்கான மிகப் பெரிய அடியாக இருக்கும். தீவிரவாதத்துக்கு எதிராக தேசிய புலனாய்வு நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது. புலனாய்வு நிறுவனங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago