பெங்களூரு சிறையில் சிறப்புச் சலுகை வழங்க அதிகாரிகள் ரூ.2 கோடி மட்டுமல்லாமல், மாதம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், மஜத மாநில தலைவருமான குமாரசாமி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதைப் போலவே, சிறைக்கு உள்ளேயும் நிலைமை மோசமாக உள்ளது. டிஐஜி ரூபா டி. மவுட்கில் தெரிவித்துள்ள அனைத்து புகார் தொடர்பாகவும் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.
பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள பணக்கார கைதிகளிடம் அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவது தொடர்கதையாகி வருகிறது. சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்க அதிகாரிகள் ரூ.2 கோடி மட்டும் லஞ்சம் வாங்கவில்லை. மாறாக மாதந்தோறும் ரூ.10 லட்சம் என்ற அளவில் லஞ்சம் வாங்கியுள்ள னர். சசிகலாவைப் பார்க்க வரும் ஒவ்வொரு பிரமுகரிடமும், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர்.
இந்த விவகாரம் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி இருக் கிறது. தற்போது ஆதாரத்தோடு புகார் கூறியுள்ள பெண் டிஐஜி ரூபா டி. மவுட் கில் மீது துறை சார்ந்த குற்றச்சாட்டை எழுப்புவது நியாயம் அல்ல. உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை முடியும் வரை இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் நீண்ட விடுப்பில் செல்ல அரசு வலியுறுத்த வேண்டும். அப்போது தான் இந்த விசா ரணையால் உண்மையைக் கண்டறிய முடியும். இல்லாவிட்டால் அதிகாரிகள் அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள். சசிகலா தரப்பிடம் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து ஆதாரங்களை அளிப்பேன். இல்லாவிட்டால் ஊடகங்களில் வெளியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிஐஜி ரூபா டி.மவுட்கில் கூறும்போது, “நான் காவல் துறை விதிமுறைகளையும், சிறைத்துறையின் சட்டதிட்டங்களையும் மீறவில்லை. நான் குற்றவாளி அல்ல. ஒரு அதிகாரியாக சிறையை பார்வையிட்டு உயர் அதிகாரிக்கு அறிக்கை அளித்தேன். நான் முதலில் ஊடகங்களிடம் போய் பேசவில்லை. டிஜிபி சத்தியநாராயண ராவ் தான் முதலில் ஊடகங்களிடம் பேசினார். சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறப்புச் சலுகை அளித்த விவகாரத்தில் என்னை மட்டும் குறி வைப்பது நியாயம் அல்ல. இந்த விவகாரத்தில் அனைவர் மீதும் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. நான் காவல் துறையின் விதிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் மதிக்கிறேன். உயர்மட்ட விசாரணைக்கு தயாராக இருக்கிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
46 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
2 hours ago