பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுப் பதற்காக நாளை நெல்லூர் வர உள்ளார்.
சச்சின் வருகையை யொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து நெல்லூர் மாவட்ட இணை ஆட்சியர் ரேகா ராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜு கிராமத்தை தத்தெடுக்க சச்சின் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவரது உதவியாளர்களான மனோஜ், நாராயணா ஆகிய இருவரும் ஏற்கெனவே இந்த கிராமத்தை ஆய்வு செய்து சென்றனர். நாளை இங்கு வரும் சச்சினும் கிராமத்தை ஆய்வு செய்கிறார். இதையடுத்து கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிவார்.
பின்னர் கிராம மக்களுடன் மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கி உள்ளார். இதனால் இந்த கிராம மக்களை தவிர வேறு விஐபி-க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் வைக்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago