முத்துப் பல்லக்கு வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

By என்.மகேஷ் குமார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று காலை முத்துப் பல்லக்கு வாகனத்தில் தாயார் எழுந்தருளினார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 3-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்தியான பத்மாவதி தாயார் ‘காலிங்க நர்த்தன’ அலங்காரத்தில் முத்துப் பல்லக்கு வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகனத்தின் முன்பு, வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் நடனமாடியபடி உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இதில் தேவஸ்தான தலமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். இரவு சிம்ம வாகனத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று முத்துப் பல்லக்கு வானத்தில் பவனி வந்த தாயார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

41 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்