உத்தரப் பிரதேசத்திலுள்ள முசாஃபர்நகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி பக்வான் யாதவ் கூறும்போது, "உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர் நகரின் கெதி சுடியன் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை ஞாயிற்றுக்கிழமையன்று அவரது இல்லத்தில் வைத்து இரு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாக அப்பெண்ணை அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago