அக்னி 3 ஏவுகணை பரிசோதனை வெற்றி

By செய்திப்பிரிவு

அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 3,000 கி.மீ. தொலைவுக்கு அப்பா லுள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி- 3 ஏவுகணை ராணுவத்தால் வெற்றிகரமாக ஏவிப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

“ஒடிசா மாநிலம் வீலர் தீவுகளில் இருந்து அக்னி- 3 வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராணுவத்தின் உத்திப் பூர்வு படைத் தளப் பிரிவு மூலம் திங்கள்கிழமை மாலை 4.55 மணிக்கு ஏவப்பட்ட அக்னி -3, அனைத்துப் பரிசோதனை நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்தது” என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (டிஆர்டிஓ) செய்தித் தொடர் பாளர் ரவி குப்தா தெரிவித்தார்.

பயன்பாட்டுப் பரிசோதனை முறையில் அக்னி-3 ஏவப்படுவது இது இரண்டாவது முறையாகும். மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முயற்சியாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி ஏவப்பட்ட போது, அது திருப்திகரமான முடிவைத் தரவில்லை.

ஆனால், 2007, 2008, 2010 ஆம் ஆண்டுகளில் சோதனை முறையில் ஏவப்பட்ட போதும், 2012, செப்டம்பர் 21 ம் தேதி ராணுவத்தால் பயன்பாட்டுப் பரிசோதனை முயற்சியாக ஏவப்பட்ட போதும் அக்னி-3 வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது. அக்னி-3 ஏவுகணையானது 17 மீட்டர் உயரம், 2 மீட்டர் சுற்றளவு, 50 டன் எடை கொண்டது. இது 1,500 கிலோ எடையுள்ள வெடிப் பொருளை ஏந்திச் சென்று தாக்க வல்லது. ஏற்கெனவே ராணுவத்தில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்