கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் 132 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்மத்திய ரயில்வே துறை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தென் மத்திய ரயில்வே துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி சாம்பசிவ ராவ் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை 132 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் ஹைதராபாத், நிஜாமாபாத், காகிநாடா டவுன், நரசாபூர், விஜயவாடா, மசூலிப்பட்டினம், சிர்பூர், காகஜ் நகர், கரீம் நகர், அவுரங்காபாத், அகோலா, ஆதிலாபாத் ஆகிய நகரங்களிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை இயக்கப்படும். இதற்கான முன் பதிவுகள் இன்று தொடங்கும் என அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
26 mins ago
ஜோதிடம்
42 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago