மோடியின் பாக். பயணத்துக்கு கிடைத்த பதில்தான் பஞ்சாப் தாக்குதல்: ஒமர் அப்துல்லா

By பிடிஐ

பஞ்சாப் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்தியிருக்கும் தாக்குதல், பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான 'திடீர்' பாகிஸ்தான் பயணத்தின் மூலம் அவருக்கு கிடைத்த சவால் என்று ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "எனது முந்தைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன், விமானப் படைதளத்தை குறிவைத்து தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே தீவிரவாதிகள் ஊடுருவி இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான 'திடீர்' பாகிஸ்தான் பயணத்துக்கான உடனடி பதில் தான் இது. அவர் சந்தித்திருக்கும் முதல் சவாலே இந்தத் தாக்குதல்.

தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒருசேர நடக்க முடியாது. அதில் பலனும் இல்லை என்பதனை பாஜக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை அவமதிக்கவே இந்த தாக்குதல் நடந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 mins ago

வணிகம்

22 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்