ஆந்திர மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலும் அதனை தொடர்ந்து சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இதனால் போலீஸார் நடத்தி வரும் வாகன சோதனைகளில் வெள்ளிக்கிழமை மட்டுமே ரூ. 6 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வாகன சோதனையில் ரூ.16 கோடி பணம்பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே, வெள்ளிக்கிழமை குண்டூர் அங்கிரெட்டி பாளையம் அருகே நடந்த வாகன சோதனையில், 2 கார்களில் கொண்டு சென்ற ரூ. 4.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று நிசாமாபாத் மாவட்டம் தூக்காம் அருகே போலீஸார் நடத்திய சோதனையில் 3 வேன்களில் கொண்டு சென்ற ரூ. 10.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஹைதராபாத் அருகே உள்ள நல்லகுண்டா செக்-போஸ்ட் அருகே காரில் கொண்டு சென்ற ரூ. 66 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். வாரங்கல் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கூட்டு ரோடு அருகே சோதனை சாவடியில் நடத்திய சோதனையில், ரூ. 75 லட்சம் சிக்கியது. அனந்தபூர் ரோள்ளா அருகே காரில் கொண்டு சென்ற ரூ. 4.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வெள்ளிகிழமை ஒரே நாளில் ரூ. 6 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
விளையாட்டு
10 mins ago
தமிழகம்
52 mins ago
சினிமா
55 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
வணிகம்
2 hours ago
சினிமா
1 hour ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago