பெங்களூருவில் தனியார் பள்ளி யில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் அடுக்கடுக்காக புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் பள்ளி தாளாளர், நிர்வாக மேலாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள மாரத்தஹள்ளி பகுதியில் குழந்தை களுக்கென தனியார் விளை யாட்டுப் பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த 3 வயது சிறுமி, கடந்த 18-ம் தேதி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், பள்ளி ஊழியர்களிடம் விசாரித்தனர்.
அப்போது பள்ளியின் மேற் பார்வையாளர் மஞ்சுநாத் (28) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பள்ளியில் குழந்தைகளுக்கு உரிய பாது காப்பு வழங்காத பள்ளி நிர்வாகத் தினர் மீது போலீஸார் கூடுதலாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து பள்ளியின் தாளாளர் கிங்ஸ்டன் டி'சவுசா, நிர்வாக மேலாளர் னிவாஸ் உட்பட 6 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
பிரபலமான பள்ளியிலேயே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோரும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்காத பள்ளியை மூடக்கோரி கோஷம் எழுப்பியதால், காலவரையறை யின்றி பள்ளி மூடப்பட்டது.
இதனிடையே சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்து வருகின்றன. 10-க்கும் மேற்பட்ட மாணவர் களின் பெற்றோர் பள்ளிக்கு எதிராக மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள னர். இதனால் கூடுதலாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன.
இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் துணை ஆணையர் ஹேமந்த் நிம்பல்கர் தலைமையிலான தனிப்படை போலீஸார் பள்ளியில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago