நாடு முழுவதும் கணவனை இழந்தோர் நல்வாழ்வுக்கான சீரிய திட்டத்தை சமர்பிக்காமல் கால அவகாசம் கோரியதை கண்டித்து மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுராவில் உள்ள கணவனை இழந்தோருக்கு மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை வழங்கும்படி ஆரம்பத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் பிற மாநிலங்களிலும் இதே அணுகு முறையை நீடித்தது. மேலும் கண வனை இழந்தோர் அதிகம் உள்ள மாநிலங்களுக்குச் சென்று அவர் கள் சந்திக்கும் துயரங்கள், தேவைப்படும் உதவிகள் குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்கும்படி தேசிய மகளிர் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அந்த ஆய்வறிக் கையை படித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பான விவாத கூட்டத்தை கூட்டும்படியும், அப்போது கணவனை இழந்தோர் நல்வாழ்வுக்கான சீரிய திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘‘நாட்டில் உள்ள கணவனை இழந்தோர் குறித்து உங்களுக்கு எந்த கவலை யும் இல்லை. நீங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும் கணவனை இழந்தோர் குறித்து கவலைப்படுவதற்கான எந்த முகாந்திரமும் குறிப்பிடப்பட வில்லை. தவிர, அவர்கள் நல் வாழ்வுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்களுக் கான உதவியை முழுமையாக புறந்தள்ளுவது கண்டிக்கத்தக்கது.
இது தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், நீதிமன்றம் ஆட்சியை நடத்த முயற்சிக்கிறது என குற்றச்சாட்டு எழுப்புகிறீர்கள்’’ என ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.
4 வாரம் அவகாசம்
அதே சமயம் 4 வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கும் விதமாக ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
தமிழகம்
3 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
39 mins ago
சினிமா
49 mins ago
இந்தியா
57 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago