அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

By செய்திப்பிரிவு

அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி-1 ஏவுகணை ஒடிசா கடற்கரை பகுதியான பாலாசோர் அருகே இன்று காலை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரி எம்.வி.கே.வி. பிரசாத் கூறுகையில்: நிலத்தில் இருந்து நிலத்தில் இருக்கும் இலக்கை குறி வைத்து, சுமார் 700 கி.மீ. தூரம் சென்று தாக்கக் கூடியது அக்னி -1 ஏவுகணை.

வீலர் தீவுகளில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கினை சரியாக சென்று தாக்கியது. இந்த நிகழ்வு, கடற்கரையில் நிறுவப்பட்டிருந்த டெலிமெட்ரி நிலைய ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்