நிலக்கரி ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் மீது உச்ச நீதிமன்ற குழு குற்றச்சாட்டு

By பிடிஐ

நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் அப் போதைய சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை சந்தித்து பேசிய விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரணை நடத்தி வந்தது.

இக்குழு தனது அறிக்கையில், இந்த சந்திப்புகளில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு சாதகமாக விசார ணையை மாற்றும் முயற்சிக்கான முகாந்திரம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா பதவி வகித்தபோது நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலரை தனது அலுவல் பூர்வ அரசு பங்களாவில் சந்தித்தாக புகார் எழுந்தது. இப்புகாரை எழுப்பிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ரஞ்சித் சின்ஹா வீட்டின் வருகையாளர் பதிவேட்டை அவர் நீதிமன்றத்தில் ஆதாரமாக அளித்தார்.

“முக்கிய ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை ரஞ்சித் சின்ஹா சந்தித்ததன் மூலம் அவ்வழக்கு விசாரணையில் சமரசம் செய்துகொண்டதாக பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து ரஞ்சித் சின்ஹா மீதான புகாரை விசாரிக்க சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் எம்.எல்.சர்மா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழு தனது முதல்கட்ட அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்றத் தில் நேற்று கூறும்போது, “நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலர் ரஞ்சித் சின்ஹாவை சந்தித்து பேசியுள்ளனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக விசாரணையை மாற்றும் முயற்சி நடந்தற்கான முகாந்திரம் இருப்ப தாக எம்.எல்.சர்மா தலைமை யிலான குழு கூறியுள்ளது.

மேலும் ரஞ்சித் சின்ஹாவின் வீட்டின் வருகையாளர் பதிவேடு உண்மையானதே என்றும் இக்குழு கூறியுள்ளது. என்றாலும் வருகையாளர் பதிவேடு உண்மையானதே என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும்” என்றார்.

ரஞ்சித் சின்ஹா தரப்பு வழக் கறிஞர் விகாஸ் சிங் கூறும்போது, “வருகையாளர் பதிவேட்டில் உள்ள விவரங்கள் போலியானவை. இதன்படி சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படும் நாட்களில் பல நாட்கள் ரஞ்சித் சின்ஹா டெல்லியில் இல்லை” என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, எம்.எல்.சர்மா சமர்ப்பித்துள்ள அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்த தனது முடிவை பின்னர் அறிவிப்பதாக கூறியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்