கோதாவரி நதியில் புனித நீராடும் விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.900 கோடி செலவில் நடத்தப்படும் என்று ஆந்திர இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் மாணிக்கியால ராவ் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள 12 புகழ்பெற்ற நதிகளில், சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நதியில் புனித நீராடும் விழா நடத்துவது இந்துக்களின் ஐதீகம்.
இதையொட்டி கோதாவரி நதியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நீராடும் விழா அடுத்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூலை 14-ம் தேதி காலை 6.26 மணிக்கு மகா ஆரத்தியுடன் இந்த விழா தொடங்க உள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து பல லட்ச கணக்கான மக்கள் பங் கேற்கும் இந்த விழாவுக்கு ரூ. 900 கோடி செலவிட திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ. 600 கோடி நிதி உதவி செய்ய உள்ளது. இதையொட்டி கோதாவரி மாவட்டத்தில் உள்ள 327 கோயில்களில் மராமத்துப் பணிகள் செய்யப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 mins ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago