உ.பி.யில் தலித் பெண் பாலியல் பலாத்காரம்

By பிடிஐ

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேடை நாடகம் பார்க்கச் சென்ற இளம் தலித் பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.

இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) போலீஸ் தரப்பில், "உத்தரப் பிரதேச மாநிலம் நாரேனி பகுதியைச் சேர்ந்த இளம் தலித் பெண் ஒருவர் நாடகம் பார்ப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணை பப்பூ என்பவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் துன்புறுத்தல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மகளிர் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்