மருத்துவ பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பொது நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதன்படி மே 1-ம் தேதி முதல்கட்ட தேர்வு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

ஜூலை 24-ல் நடைபெற்ற இரண்டாம்கட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் 14 ஆயிரத்து 500 பேர் தேர்வு எழுதினர்.

தற்போது நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை >http://cbseresults.nic.in/neet/neet_2016.htm இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

48 mins ago

உலகம்

54 mins ago

ஆன்மிகம்

52 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்