கடற்படை தலைமை தளபதி ராஜினாமா விவகாரம்: பிரதமருடன் அந்தோணி சந்திப்பு

By செய்திப்பிரிவு

கடற்படை தலைமை தளபதி தேவேந்திர குமார் ஜோஷி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசித்தார்.

கடந்த சில மாதங்களாக கடற்படை கப்பல்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதற்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி நேற்று (புதன் கிழமை) அறிவித்தார்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழ்மை) பிரதமரை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி, "கடற்படை தலைமை தளபதி தேவேந்திர குமார் ஜோஷி நேற்று (புதன் கிழமை) என்னை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். இது தொடர்பாக பிரதமர் உள்பட உயர்மட்டத்தினர் பலரிடம் அலோசனை நடத்திய பின்னர் ஜோஷி ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்றார்.

ஜோஷி ராஜினாமாவை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்வதாக நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்தோணி கடும் விமர்சனத்துக்குள்ளானார் என்பது கவனிக்கத்தக்கது.

ராஜினாமா செய்த கடற்படை தலைமை தளபதி தேவேந்திர குமார் ஜோஷி குறித்து கூறுகையில், அவர் ஒரு நல்ல அதிகாரி மட்டுமல்ல சிறந்த மனிதர் என்றார் அந்தோணி. மேலும், அவரது ராஜினாம வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

5 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்