ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்கட்ட தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
ஜம்மு காஷ்மீரில் முதல்கட் டமாக 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிப்போரா, கந்தர்பால், லடாக் பகுதியில் கார்கில், லே, ஜம்மு பகுதியில் கிஸ்துவார், தோடா, ராம்பன் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமங் நருலா முதல்கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதன்படி வேட்பாளர்கள் நவம்பர் 5-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை 7-ம் தேதி நடக்கிறது. வேட்புமனு வாபஸ்பெற 10-ம் தேதி இறுதி நாளாகும். அனைத்து கட்ட வாக்குப் பதிவுக்குப் பின் டிசம்பர் 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
உலகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago