உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக குற்றச்சாட்டு அறிக்கையை தயார் செய்த போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உ.பி. மாநில பாஜக பொறுப்பாளராக இருந்த அமித் ஷா வெறுப்பை உமிழும் வகையில் பேசியதாக அவர் மீது புதிய மண்டி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 10-ம் தேதி அமித் ஷா மீது போலீஸ் தரப்பில் நீதி மன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் (புதிய மண்டி) யோகேந்தர் சிங் மற்றும் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட துணை ஆய்வாளர் பரத் லால் ஆகியோர் தயாரித் திருந்தனர். ஆனால் அமித் ஷா மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்த கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் சுந்தர் லால் அதை போலீஸாருக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்நிலையில், யோகேந்தர் சிங், பரத் லால் ஆகிய இரு வரும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
சுற்றுச்சூழல்
25 mins ago
சுற்றுலா
37 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago