சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அருண் ஜேட்லி

By செய்திப்பிரிவு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சிகிச்சை முடிந்து செவ்வாய்கிழமை வீடு திரும்பினார்.

செப்டம்பர் 2-ம் தேதி, அருண் ஜேட்லிக்கு சர்க்கரை நோயினால் ஏற்பட்ட தாக்கத்தை சீரமைக்க டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனைக்காக கடந்த வாரம் அதே தனியார் மருத்துவமனையில் ஜேட்லி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அங்கு அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.

நிதி, கார்ப்பரேட் விவகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை அருண் ஜேட்லி கவனித்து வருகிறார். மருத்துவமனையில் இருந்த நிலையில் அவசரப் பணிகளை மட்டும் அவர் மேற்கொண்டு வந்தார். வீடு திரும்பியுள்ள நிலையில் இன்னும் 2 தினங்களில் அவர் வழக்கமான பணிக்கு திரும்புவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

39 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்