டெல்லியில் 3 குற்றவாளிகள் சுட்டுக் கொலை: நள்ளிரவில் போலீஸ் அதிரடி

By செய்திப்பிரிவு

டெல்லியில் வெகு நாட்களாக தேடப்பட்டு வந்த ரவுடி கும்பல் தலைவன் உள்பட 3 குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொலை வழக்குகள், ஆள் கடத்தல் வழக்கு, வழிப்பறி என 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கும்பல் தலைவன் சுரேந்தர் மாலிக் என்ற நீட்டு டபோடாவை பிடிக்க உதவும் நபருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில் வசந்த் கன்ச் என்ற பகுதியில் நீட்டு டபோடியாவும் அவரது சகாக்களும் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அப்பகுதியை காவல்துறை சிறப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். 3 பேரையும் சரணடையுமாறு தெரிவித்தனர்.

ஆனால் போலீசார் கூறியதை சற்றும் சட்டை செய்யாத குற்றவாளிகள் 3 பேரும் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து காரில் தப்பிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டதில் நீட்டு டபோடாவும், அவருடன் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்