வாக்குறுதிகளை நிறைவேற்ற கேஜ்ரிவாலின் தந்தை யாகம்

By செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி மக்களுக்கு அளிக் கப்பட்டிருந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடவுளின் அருளைப் பெறும் வகையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த் ராம், அங்குள்ள கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகத்தை நடத்தினார்.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான கோவிந்த் ராம் கேஜ்ரிவால், தனது பகுதியில் வசிக்கும் மக்களு டன் கோயிலுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வேண்டுதலுடன் யாகம் நடைபெற்றது.

அதன் பின் செய்தியாளர்களிடம் கோவிந்த் ராம் கேஜ்ரிவால் கூறியதாவது: "அர்விந்த் கேஜ்ரிவால் மிகச் சிறந்த மனிதர். எங்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது எல்லாம் எனது காலில் விழுந்து ஆசி பெறாமல் செல்ல மாட்டார்.

முதல்வரான பின்பும், ஆசி பெறும் பழக்கத்தை அவர் விடவில்லை. முதல்வரான பின்பு அவரின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போலத்தான் உள்ளார். எனது மகனுக்கு தீவிர கடவுள் பக்தி உண்டு. சவால்கள் அனைத் தையும் கடவுளின் துணையுடன் அவர் எதிர்கொள்வார்" என்றார்.

டெல்லி போலீஸாரின் பாதுகாப்பை ஏற்க வேண்டும் என்று அர்விந்த் கேஜ்ரிவாலை வலியுறுத்துவீர்களா எனக் கேட்டபோது, "கடவுளின் பாதுகாப்பு அவருக்கு உள்ளது. அவர் அர்விந்த்தை பார்த்துக்கொள்வார்" என்றார் கோவிந்த் ராம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்