காஷ்மீர் அனைத்துக் கட்சி குழுவுடன் இரண்டு நாள் பயணத்தை முடித்து கொண்ட ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்தப் பயணத்தின் முக்கிய அம்சம் குறித்து ஆலோசிக்க செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீரில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் 30 பேர் அடங்கிய குழு கடந்த சனிக்கிழமை 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றது. இக்குழுவினர் அங்குள்ள பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியின் சந்திப்பின் முக்கிய அம்சமாக காஷ்மீரில் தற்போதைய நிலைமை குறித்தும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்தும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
35 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
51 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
56 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago