உத்தரப் பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் தரப்பில், "உத்தரப் பிரதேசத்தின் எட்டா மாவட்டத்திலுள்ள சரைன் நீம் கிராமத்தில் மினி பேருந்து ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். அவர்களில் 10 பேர் இந்த விபத்தில் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
45 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago