தண்ணீர் மானி (மீட்டர்) ஊழல் புகார் தொடர்பாக, நேரில் ஆஜராகுமாறு டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) சம்மன் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக ஏசிபி தலைவர் எம்.கே.மீனா நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “தண்ணீர் மானி ஊழல் புகார் தொடர்பாக, கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கும் சம்மன் அனுப்பி உள்ளோம்” என்றார்.
ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, கடந்த 2011-ம் ஆண்டு டெல்லி தண்ணீர் வாரியத்துக்கு 2.5 லட்சம் தண்ணீர் மானி வாங்கப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்படவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட நிறு வனத்துக்கு சாதகமாக ஒப்பந்தப் புள்ளி விதிமுறைகள் மாற்றப் பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago