ஹுத்ஹுத் புயல் பாதிப்பு: ஒடிஸாவில் 5,000 மரங்கள் அழிந்தன

By பிடிஐ

ஹுத்ஹுத் புயல் பாதிப்பால் ஒடிஸாவின் கோராபுட் மாவட்டத்தில் விலைமதிப்பற்ற 5000-த்துக்கும் அதிகமான தேக்கு, சால் போன்ற அரிய வகை மரங்கள் அழிந்து நாசமாகின.

கடந்த 12-ஆம் தேதி ஞாயிறு அன்று ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கரையை கடந்த போது, ஒடிஸா கடலோர மாவட்டங்களில் 60 - 70 கி. மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஒடிஸா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஒடிஸாவில் ஹுத்ஹுத் புயல் பாதிப்பு குறித்து ஆரம்பக்கட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கோராப்புட் மாவட்டத்தில் மட்டும் 5000-த்தும் அதிகமான மரங்கள் அழிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

கோராப்புட் மாவட்டத்தின் 4 வனப்பகுதிகளில் இருந்த விலைமதிப்பற்ற தேக்கு, சாலமரம், சக்குந்தா, யூக்கலிப்டஸ் போன்ற வகையிலான மரங்கள் அழிந்ததாக வனத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்