கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை சேர்ந்த அப்துல் ஜாஃபர் (35) தனது உறவினர்கள் 8 பேருடன் நேற்று ஜீப்பில் பீஜாப்பூருக்கு சென்றார். சிந்தகி என்ற இடத்தில் ஜீப் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் செல்போனை சார்ஜ் செய்ய முயன்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் அப்துல் ஜாஃபர் (35), மாணிக் சாஹூஹார் (36), மேக்னாந்த கெரூர் (38), அனில் கெரூர் (40) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேரை போலீஸார் மீட்டு பீஜாப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணை யில் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago