காஷ்மீரில் மாணவர்கள் - பாதுகாப்புப் படையினர் மோதல் எதிரொலி: மூன்றாவது நாளாக கல்லூரிகள் மூடல்

By பிடிஐ

காஷ்மீரில் மாணவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, காஷ்மீரில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த, காஷ்மீரின் கல்லூரிகளுக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை ஸ்ரீநகரிலுள்ள ஸ்ரீ பிரதாப் கல்லூரிக்கு அருகில் மாணவர்கள் கூட்டமாக திரண்டு பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கோஷமிட்டு கற்களை வீசி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் தரப்பில் மாணவர்களை விரட்ட கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.

முன்னதாக சனிக்கிழமை காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் தரப்பில் 50 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் காஷ்மீரின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காஷ்மீரில் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

56 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்