உத்தரப் பிரதேசத்தின் நொய்டா நகரில் கென்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் நொய்டாவில் தாக்கப்பட்ட நிலையில் இன்று (புதன்கிழமை) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து சிறப்புக் கண்காணிப்பாளர் சுஜதா சிங் கூறும்போது, 'மரியா புரேன்டி (26) என்ற கென்யாவைச் சேர்ந்த இளம்பெண் டெல்லியிலிருந்து நொய்டாவுக்கு காரில் வரும்போது சில குண்டர்களால் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அவரை தொடர்பு கொண்டு விவரங்களை சேகரித்துள்ளோம். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து சிசிடிவி கேமிரா காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன" என்றார்.
கைலாஷ் மருத்துவமனை மருத்துவர் சனில் கபூர் தி இந்து (ஆங்கிலம்) விடம், "தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆபத்தான காயங்கள் ஏதும் இல்லை" என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago