சாதிவாரி மக்கள்தொகை விவரம் வெளியிட வேண்டும்: நிதிஷ்குமார் வலியுறுத்தல்

By பிடிஐ

சாதிவாரி மக்கள்தொகை விவரம் வெளியிட வேண்டும் என்று நிதிஷ்குமார் வலியுறுத்தி யுள்ளார்.

பிஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற முதல்வர் நிதிஷ்குமார், அனைத்து தரப்பு மக்களின் சமூக-பொருளாதார மேம்பாடு குறித்து பேசினார்.

அப்போது, ‘நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின், சமூக-பொருளாதார நிலைமையை அறிந்துகொள்ள, நிஜமான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

அதற்கு, 1931-ம் ஆண்டுக்குப் பிறகு, முதல்முறையாக சேகரிக் கப்பட்ட, சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு (,2011) விவரங்களை மத்திய அரசு வெளியிடவேண்டும். பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சி குறித்த மர்மங்களை விலக்கவும், அவர் களை மேம்படுத்த திட்டங்கள் தீட்டுவதற்கும் இந்த கணக் கெடுப்பு விவரங்கள் உதவியாக இருக்கும்’ என்றார்.

நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமிது அன்சாரி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கடந்த ஜூலை மாதம், 2011-ம் ஆண்டின் கணக் கெடுப்பை மத்திய அரசு வெளி யிட்டது. எனினும், அதில் சாதி அடிப்படையிலான தகவல்கள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்