ஆந்திரம்: விஜயநகரம் அருகே ரயில் மோதி 8 பேர் பலி

By செய்திப்பிரிவு





விஜயநகரம் அருகே உள்ள கோட்லம் என்ற இடத்தில், ஆலப்புழை - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் தீ பரவியதாக வந்ததி கூறப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

பின்னர், அந்த ரயில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் தண்டவாளத்தைத் தாண்டி ஓட முயன்றனர். அப்போது எதிரே வந்த ராயகாடா - விஜயவாடா பயணிகள் ரயில், தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டவர்கள் மீது மோதியது.

இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து அதிர்ச்சி வெளியிட்ட ஆந்திர முதல்வர் கிரண்குமார், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 mins ago

விளையாட்டு

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்