மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் பலி

By செய்திப்பிரிவு

தெற்கு மும்பையில், அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

மவுன்ட் பிளான்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் தீ பிடித்தது. 12-வது தளத்தில் குடியிருந்த வைர வியாபாரியும், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான தினேஷ் காந்தி என்பவரது வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன.

அப்போது, அந்த வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததே தீக்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் அருகில் இருந்த பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த கட்டத்தில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் தீ அடுத்தடுத்த கட்டங்களுக்கு பரவுவது தடுக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்